Thursday 16 March 2017

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

💎காட்டுலே புலியும், வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே.

💎பொங்குற காலத்தில் புளி. மங்குற காலம் மாங்கா
.
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

💎எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல.

💎தன் காயம் காக்க வெங்காயம் போதும்

💎வாழை வாழ வைக்கும்

💎அவசர சோறு ஆபத்து

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

💎சித்தம் தெளிய வில்வம்

💎சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி, சூட்டை தணிக்க கருணை கிழங்கு

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

"உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"

No comments:

Post a Comment