Wednesday 22 February 2017

கதை சிறுசு, கருத்தோ பெரிசு


*இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.

*தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

*”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”.

°•○●

*கேள்வி :

*ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

*(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக்

*கேட்டு விட்டு, விடை சாென்னால்தான், நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).

°•○●

*தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.

*கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

*அவள் சொன்னாள் :

*விடை சொல்கிறேன்.

*அதனால்,
*அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும் ;

*உனக்கு உன் நாடு கிடைக்கும்.

*ஆனால் எனக்கு
*என்ன கிடைக்கும் ?

*அவன் சொன்னான்,

*"என்ன கேட்டாலும் தருகிறேன்”.

*சூனியக்காரக்
*கிழவி, விடையைச் சொன்னாள்,
  
   *♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே,

*ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

°•○●

*இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல,

*அவர்கள் திருமணம் நடந்தது.

*இவனுக்கு நாடும் கிடைத்தது.

*அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.

*வேண்டியதைக் கேள் என்றான்.

*அவள் கேட்டாள்

*"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”.

*கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

*உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

*அவள் சொன்னாள்,

*"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;

*ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.

*இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.

*அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்

*"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் ;     முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,

*அவள் சொன்னாள்,

*"முடிவை என்னிடம் விட்டு விட்டதால்,

*நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.

°•○●

*ஆம்!

*பெண்,
*அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.

*முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

*அனைவரும் புரிந்து செயல்படுங்கள் !.

*
*

மனசை தொட்ட பதிவு.

No comments:

Post a Comment